சரணகோஷம் செய்வேனே!
வலியோடு மாலையணிந்து விரதமேற்க வைத்தனையே
வலிநீக்கி பதினைட்டு படிஏற வழிகாட்டி வருவாயே
புலிமீதமர்ந்து நோய்தீர்க்க புலிப்பால் கொண்ர்ந்தவனே
புவி மீதுஎன் வினைதீர பாதமதைத் தருவாயே
கலியுக தெய்வமே குன்றமர்ந்த குமரனே
காலடியில் சரணடைந்தேன் காத்தருள வருவாயே
சலியாத மனம்தந்து சன்மார்க்கம் அருள்வாயே
சபரிகிரி சாஸ்தாவே சரணகோஷம் செய்வேனே!
மலிவான சிந்தனைகள் மனதைவிட்டு நீக்குவயே
மகிழ்ச்சி தரும்சொல் மலர்ந்தருளச் செய்வாயே
நலிந்தோர் வாழ்ந்திட நற்சிந்தனை வளர்ப்பாயே
நாளெல்லாம் அவர்வாழ நானுழைக்க துணையாவாயே
பலியாகிப் போகட்டும்என் பாவங்கள் நீங்கட்டும்
பொலிவோடு பிறர்வாழ புத்துணர்வு பெருகட்டும்
ஒலிக்கும் பம்பையென ஒளிர்கின்ற மகரசோதியென
ஒங்காரமாய் உள்புகுந்து உன்னுள்எனை சேர்ப்பாயே!
வலியோடு மாலையணிந்து விரதமேற்க வைத்தனையே
வலிநீக்கி பதினைட்டு படிஏற வழிகாட்டி வருவாயே
புலிமீதமர்ந்து நோய்தீர்க்க புலிப்பால் கொண்ர்ந்தவனே
புவி மீதுஎன் வினைதீர பாதமதைத் தருவாயே
கலியுக தெய்வமே குன்றமர்ந்த குமரனே
காலடியில் சரணடைந்தேன் காத்தருள வருவாயே
சலியாத மனம்தந்து சன்மார்க்கம் அருள்வாயே
சபரிகிரி சாஸ்தாவே சரணகோஷம் செய்வேனே!
மலிவான சிந்தனைகள் மனதைவிட்டு நீக்குவயே
மகிழ்ச்சி தரும்சொல் மலர்ந்தருளச் செய்வாயே
நலிந்தோர் வாழ்ந்திட நற்சிந்தனை வளர்ப்பாயே
நாளெல்லாம் அவர்வாழ நானுழைக்க துணையாவாயே
பலியாகிப் போகட்டும்என் பாவங்கள் நீங்கட்டும்
பொலிவோடு பிறர்வாழ புத்துணர்வு பெருகட்டும்
ஒலிக்கும் பம்பையென ஒளிர்கின்ற மகரசோதியென
ஒங்காரமாய் உள்புகுந்து உன்னுள்எனை சேர்ப்பாயே!