வியாழன், 30 மே, 2019

அரியணை ஏறும் அஞ்சாத சிங்கம்


1. பிரதமராக அரியணை ஏறும்
      பார் புகழும் அஞ்சாத சிங்கம்
 பாரதம் புகழ் இனி ஒங்கும்
   பாரில் நாடுகள் வாழ்த்தும்
                           சீரான அரசு செழிக்கும்
   சீர்வளம் யாவும் பெருகும்
    கூரான அறிவும் பொறுமையும்
           கொண்ட மோடிஜியின் பதவிஏற்பு

2. உலகின் திருவிழா இன்று
          உன்னம் பொங்கும் மகிழ்வால்
   பல்வேறு திட்டங்கள் இனி
          பாய்ந்துவரும் காட்டாறுபோல்
         கலகலத்து ஒடிவரும் கங்கையும்
             காவிரியும் இணையும் விரைவில்
              சலசலக்கும் கிருஷ்ணா கோதவரி என
       சகல நதிகளும் இணையும்

3. தாய்மை சிறக்க தக்கபல
        திட்டங்கள் கேஸ் மானியம்
          சேய் தாய் பாதுகாப்பு மருத்துவம்
          சேர்த்து வரும் இன்ஷுரன்ஸ்
நோய்நொடி ஒடிவிடும்
             நாடிப்பெருகும் மருத்துவர்களால்
                             பாய்ந்து வரும் நீரால்
   பலப்படும் விவசாயம்

4. உழவருக்கு கைகொடுக்க வரும்
உண்மையான கடன்வசதி
     தழைக்கும் விதை உரம் மானியம்
தன்வீடு தேடிவரும் இனி
          பழங்குடியினருக்கு பல்வேலை வாய்ப்பு
       பள்ளிக்கள் பெருக்கம் கல்விதரம்
  செழிக்கும் கல்வித்துறை இனி
   செவ்விய திட்டங்களின் வழி

5. வீடு இல்லாதோர் இல்லை இனி
        விளங்கும் வீடுடல்லாம் ஒளிவீசும்
   நாடுஎல்லாம் பாதைகள் வளரும்
         நல்லொளி தரும் மின்விளக்குடன்
ஒடி ஒளியும் போராட்டங்கள்
ஒளிதரும் தொழில்வளம்
                          தேடித்தேடி தொழிற்சாலை
   தோன்றும் கிராமம் தோறும்


6. கலாச்சாரம் பண்பாடு பாதுகாப்பு
   கலைகள் எங்கும் பொலியும்
சிலை கொண்ட கோவில்கள்
சீரோடு பாதுகாக்கப்படும்
துவங்கும் இந்தியப் பண்பாடு
           துதித்து அனைவரும் ஒன்றாகிடுவர்
     கலவரம் என எதும் இல்லை இனி
                களங்கமிலா மதங்கள் இணைந்து வாழும்

7. இமயமுதல் குமரிவரையில்
         இந்தியன் என்ற ஒரே உணர்வு
  எமது நாடு எனும் பற்றுடன்
         எழுந்திடும் ஒற்றுமை உணர்வு
      தமது என எதையும் எண்ணாமல்
     நமது என பகிர்ந்து மகிழும்
   மதம் மொழி இனம் பிரிவுகள்
       விலகி ஒடும் வெற்றுமையில்
                                 ஒற்றுமை காணும்

8. மலர்ந்த தாமரை நாடெங்கும்
   மணம் வீசி மகிழ்விக்கும்
  எல்லா நேரமும் நாட்டையே
     எண்ணி நிற்கும் தலைவன்
        வல்லவன் மோடிஜி தலைமையில்
    வளர்க்கும் பாரத நாட்டை
              வல்லாசாக்கும் வான்தொடும் புகழ்பெரும்
                  வாழ்த்துவோம் வாழ்க மோடி அரசு என
                           வாழ்க வந்தேமாதரம்