செவ்வாய், 9 டிசம்பர், 2014

காப்பு



காப்பு
ஓம்எனும் பிரணவத்தின் ஓங்கார வடிவாகி
    ஒடித்த தந்தமதில் ஓர் பாரதம் வடித்திட்ட
    தும்பிக்கை நாயகனே துவக்கத்தின் முதல்வனே
    துளிராகி என் கவிதை தழைத்திடவந்திடுக
     கம்பனுக்கு கால்சலங்கை கலகலவென அசைத்து
            கவிஞனுக்கு துணையாகும் கலைவாணி அறிவரசி
               நம்பிக்கை எனக்கருள நற்கவியில் வந்திடுக
    நயமான தளமதில் நயம்பட விளங்கிடவே!

விளங்கும் மகரசோதி வீற்றிருக்கும் சபரிகிரி
       விண்ணதிரும் சரணமாகி விசுகின்ற மணமாகி
களங்கம் நீக்கியெம் கைபிடித்து ஏற்றிவிடும்
       காந்தமலை பாலகனே கவிதையில் வந்தருள்க
   தளங்களில் தேன்கவி தொடுத்திட புகும்வேளை
                 தமிழாகி மலராகி தாயாகி அன்பாகி
உளம்கனிய கவிமலர் உரைத்திட வழிதருக
    ஊரோர் பார்த்தாலே உளமாற ஓர் நன்றியே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக