புதன், 7 டிசம்பர், 2016

இனிய திருமணநாள்

                                           இனிய திருமணநாள்

இருபத்துஏழு ஆண்டுகள் இணைந்த இருமலர்கள்
        இன்றும் மணந்தரும் இனிய திருமணநாள்
 ஒருமித்த கருத்துக்கள் ஒராயிரம் புதுமைகள்
        ஒதுங்கி நிற்காது ஒளியூட்டிடும் பணிகள்
 கருத்தோடு தொழில்முனைவு கணமேனும் ஒய்வின்றி
      கனிவோடு சுற்றமோடு கலந்திடும் புதுமலர்கள்
 திருமாலும் திருவுமென தேடிச்செல்லும் உறவாகி
    தேர்ந்து முன்பின தலைமுறைக்கு பாலமாகி

 விளங்கும் சுடர்களே வானளவு ஒளிவீசி
      விரைந்து செயலாற்றி விந்தைகள் படைத்திடுக
உளங்கனிய ஒருமகளை உன்னத சேவைக்கும்
      உயர்வுக்கு ஒருமகனை ஊக்குவிக்கும் பெற்றோராகி
களங்காணும் கவிதைகளே! காலமெலாம் போற்றும்
     காவியம் படைத்திடுக! கையிலெடுத்த தூரிகையால்
தளங்கண்டு துணிவோடு தீட்டிடுக! தரணியில்
     தீபமாய் ஒளிதருக தாயின் நல்லாசிகள்!

 8.12.2016           
ராதாகவி