நினைவுநாள்
வாமனன் என்னும் வாஞ்சைமிகு தெய்வம் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்தது எமக்காக !
வானளாவிய அன்பு வாரித்தரும் பரிவு
வந்தவர் சுற்றம் எனவேற்றுமையிலா உறவு!
கணமேனும்ஓய்விலா கடினமான உழைப்பு!
கல்வி தொழில் பயிற்சிகள் கற்றது சுயமாக!
என்ன வேலையென எண்ணிக்கையில்லாமல்
எதையும்செய்யும்கைகளும் அறிவும்!
2 தயக்கமின்றி தானாக வந்துதவும் தன்மை!
தாயும் தந்தையுமாகி அனைவரையும்வளர்த்த பாங்கு!
தனக்கென எதையும் தேடவில்லை!
தடையில்லா பாசமெலாம் மற்றவர்க்கு!
எழுபத்து எட்டு ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்து
எண்ணத்தில் நிறைந்திருந்தது எங்கோ சென்று விட்டாய்!
தொழும் உம்நினைவில்தொடர்கிறது எம் வாழ்வு
தெய்வமாக இருந்து என்றும் காப்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக