சனி, 20 டிசம்பர், 2025

எங்கள் பாரதி

.    ‌‌.  எங்கள் பாரதி 

எட்டயபுரம் தந்த எழில் கவி பாரதி 
‌....எங்கள் பாரதம் தழைக்க எழுந்த பூபதி 
பாட்டினில் பரவசம் தந்தான் ‌.....பண்பினை இசையினில் கலந்தான் 
எட்டாத துறையில்லை பொருள் இல்லை 
.....ஏட்டினில் அனைத்தையும் பாடி வைத்தான் 
கொட்டும் அருவி என கவிதை மழை 
‌....குளிர்விக்க நாளும் பொழிந்தான் 

.‌.. 2 கலையை காட்சியை கண் முன் நிறுத்தினான் 
      காணாத லட்சிய பாதை வகுத்தான் 
மலையை அருவியை மாங்குயிலை பாடினான்      ‌...‌.‌‌மண்ணில் பெண்மையை போற்றினான்
 சிலையான மாந்தர் சிந்தனையை தூண்டினான்  .
‌....சுதந்திர கனலை மூட்டி வளர்த்தான் 
தலையான பாரதத்தை தரணியில் போற்றினான் ....
.....தலைவன் கனவு இன்று நினைவாக மாறியது!

இன்று பாரதி பிறந்த நாள் 
  பாரதியை போற்றுவோம்
               ராதா கவி

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

 

        திருமதி செளம்யா வரதராஜன்!

பரதமுனி கண்டெடுத்த பரதநாட்டியம்

        பாரதத்தின் பழம்பெரும் கலைக்களஞ்சியம்

கரங்களும் கண்ணும் கருத்தும் இனைந்து

        கவினுற கால்கள் சலங்கையுடன் சதிராடும்

குரல் எழுப்பும் கீதமதை கைவிரல்களில்

         முத்திரையும் பாவனையும் விளக்கிடும்

சிரசும் சிங்காரமும் சிலிர்க்கும் ஆடைகளும்

         சிந்தனையில் புகுந்து விளையாடும்

பரதமதை போற்றுவோம் பாரினில்

         பழங்கலைகள் வளர்த்திடுவோம்!

வாழ்க! வளர்க!  நின் கலைத்திறன்!

 

               21.12.25                             ராதாகவி