வாழ்த்து மடல்
திருமதி செளம்யா வரதராஜன்!
பரதமுனி கண்டெடுத்த பரதநாட்டியம்
பாரதத்தின் பழம்பெரும் கலைக்களஞ்சியம்
கரங்களும் கண்ணும் கருத்தும் இனைந்து
கவினுற கால்கள் சலங்கையுடன் சதிராடும்
குரல் எழுப்பும் கீதமதை கைவிரல்களில்
முத்திரையும் பாவனையும் விளக்கிடும்
சிரசும் சிங்காரமும் சிலிர்க்கும் ஆடைகளும்
சிந்தனையில் புகுந்து விளையாடும்
பரதமதை போற்றுவோம் பாரினில்
பழங்கலைகள் வளர்த்திடுவோம்!
வாழ்க! வளர்க! நின் கலைத்திறன்!
21.12.25 ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக