புதன், 22 பிப்ரவரி, 2017

தந்தருள்வாய்!

                                                             தந்தருள்வாய்!

நந்தி பின்னிருக்க நளினமாய்சிவம் சாய்ந்திருக்க
   நாகம் கழுத்திலாட நற்கங்கை தலையிலாட
சந்திரப் பிறை சடையிலாட சதிராடும் குழையாட
   செம்மேனி எங்கும் சீர் உத்திராட்சம் உவந்தாட
முந்திவரும் புலித்தோல் முழங்கால் வரையிலாட
   முன்காலில் சிலம்புகள் முறுவலித்து சதிபோட
 சிந்தையில் புகுந்தாட சிவபேருமானே வந்தாடு
    சிவராத்திரி நன்னாளில் சிவபதவி தந்தருளவே!

                                                                                                        ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக