வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

குடையோடு குறிலாக வந்து                                 நெடிலாகவளர்ந்த வாமனன்
அடிதாங்க முடியளித்த மாவலி
அரசாண்ட இடம் காண வரும் நாள்!
கொடிமலர்கள்அத்தப்பூகோலமாகிட
கூடிக் களிக்கும்ஓணத்திருநாள்!
வடிவான நீள் வாழையிலையில்
வகையான ஓணசதாஉண்ணும் நாள்!

2
ஆடி வரும் நதியில் நீள் ஓடம்
ஆர்ப்பரித்து ஓடும் திருநாள்!
வடிவான வெண் ஆடை மகளிர்
வட்டமிட்டு வாழ்த்தி ஆடும் நாள்!
கூடிய பாரதம் குளிர்ந்து மகிழ
கூடிவரும் ஓணத்திருநாள்!
பாடிமகிழ்வோம்பல்வகைஉணவோடு
பாரெல்லாம் வாழ்க! வாழ்க!
                                  ராதாகவி
அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 5 செப்டம்பர், 2019

உறுதுணையாக

உறுதுணையாக

அஆகற்பித்தவர்
ஆசிரியர்
அகபுற ஒழுக்கம்
புகட்டியவர்
ஆசிரியர்
அன்னை தந்தைக்கு
பின்னவர் ஆசிரியர்
அவரை வணங்க
அறிவுறுத்திய முன்னவர்
ஆசிரியர்
எண்ணும் எழுத்தும்
தந்தவர் ஆசிரியர்
ஏணிப்படியாகி ஏற்றியவர்
ஆசிரியர்
பண்பும் கலையும்
காட்டியவர் ஆசிரியர்

2
வேற்றுமைகளை
களைபவர் ஆசிரியர்
விளையாட்டை போற்றியவர்
ஆசிரியர்
கற்றவன் உயரக்கண்டு தினம்
கண்ணீர் மல்கி களிப்பவர்
ஆசிரியர்
பெற்ற நாட்டின் பாசம் மிகுந்திட
பாட்டில் தினம் வழி வகுத்தவர்
ஆசிரியர்
உற்ற உறவாக என்றும்
உறு துணையாக
உள்ளத்தில் இருப்பவர்
ஆசிரியர்

3
கண்ணெனும் கல்வியே
உயர் செல்வமென
காலத்தில் தந்தவர்
ஆசிரியர்
எண்ணங்கள் உயர்வையே
நோக்கிட
எத்தனையோ வழி காட்டியவர்
ஆசிரியர்
பண்ணில் இசைத்து பாடிட
பாரினில் கண்முன் தெய்வம்
ஆசிரியர்
விண்ணில் பறந்தாலும்
விந்தைகள் புரிந்தாலும்
வெற்றிக்கு அடியிட்ட
ஆசிரியரை பணிவோம் இன்று!
                            ராதாகவி

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

இதயத்தில் வருவாயே இளங்களிறே!

இதயத்தில் வருவாயே
இளங்களிறே!

ஆனை முகத்தோனே
    அறிவே வடிவானவனே  !                                                               
பானை வயிறோனே
    பகலவன் ஒளியானவனே!
தேனின் சுவையோனே
  தும்பிக்கை உடையோனே!
முனைந்து ஒடித்த தந்தமதில்
முதல் காவியம் எழுதியவனே!

2
கணையும் அங்குசமும்
கரங்களில் கொண்டவனே!
இணையும் விசிறியென ஆடும்
  இருசெவி உடையோனே!
  இனிய மோதகப்பிரியனே!
முன்னைக் கும் முன்னவனே!
மூல ஓம் வடிவானவனே!
கண்மூடி கரணம் போட
கனிந்து வந்து அருள் பவனே!

3.
திணைவள்ளிதேவாணைசூழ் 
திருக் குமரனுக்கு மூத்தவனே!
அணைக்கும் அன்பு சபரி
    அருள் ஐயப்பன் சகோதரனே!
மணையாளை இடம் கொண்ட
மலையவன்  சிவன் மகனே!
இணையிலா இளங்களிறே எம்
இதயத்தில் வருவா யே!