இதயத்தில் வருவாயே
இளங்களிறே!
ஆனை முகத்தோனே
அறிவே வடிவானவனே !
பானை வயிறோனே
பகலவன் ஒளியானவனே!
தேனின் சுவையோனே
தும்பிக்கை உடையோனே!
முனைந்து ஒடித்த தந்தமதில்
முதல் காவியம் எழுதியவனே!
2
கணையும் அங்குசமும்
கரங்களில் கொண்டவனே!
இணையும் விசிறியென ஆடும்
இருசெவி உடையோனே!
இனிய மோதகப்பிரியனே!
முன்னைக் கும் முன்னவனே!
மூல ஓம் வடிவானவனே!
கண்மூடி கரணம் போட
கனிந்து வந்து அருள் பவனே!
3.
திணைவள்ளிதேவாணைசூழ்
திருக் குமரனுக்கு மூத்தவனே!
அணைக்கும் அன்பு சபரி
அருள் ஐயப்பன் சகோதரனே!
மணையாளை இடம் கொண்ட
மலையவன் சிவன் மகனே!
இணையிலா இளங்களிறே எம்
இதயத்தில் வருவா யே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக