குடையோடு குறிலாக வந்து நெடிலாகவளர்ந்த வாமனன்
அடிதாங்க முடியளித்த மாவலி
அரசாண்ட இடம் காண வரும் நாள்!
கொடிமலர்கள்அத்தப்பூகோலமாகிட
கூடிக் களிக்கும்ஓணத்திருநாள்!
வடிவான நீள் வாழையிலையில்
வகையான ஓணசதாஉண்ணும் நாள்!
2
ஆடி வரும் நதியில் நீள் ஓடம்
ஆர்ப்பரித்து ஓடும் திருநாள்!
வடிவான வெண் ஆடை மகளிர்
வட்டமிட்டு வாழ்த்தி ஆடும் நாள்!
கூடிய பாரதம் குளிர்ந்து மகிழ
கூடிவரும் ஓணத்திருநாள்!
பாடிமகிழ்வோம்பல்வகைஉணவோடு
பாரெல்லாம் வாழ்க! வாழ்க!
ராதாகவி
அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக