ஆயிரவண்ண மலர்கொண்டு அத்தப்பூ கோலம்
அரசாண்ட் மாவலியை அழைக்கின்ற கோலம்
பயிலாத பாலகனாய் பரந்தாமன் திருக்கோலம்
பாரளந்து விண்ணளந்த பாதுகாக்கும் உயர்கோலம்
மயிலாக குயிலாக மாதர்கள் அணிக்கோலம்
மாநிலத்தில் ஆடிகின்ற மாதிருவோண விழாக்கோலம்
உயிராக உறவுகளை உணர்கின்ற உட்கோலம்
உள்ளிருந்து தேவனவன் உயர்வளிக்கும் வரக்கோலமே!
ராதாகவி
எல்லோருக்கும் இனிய ஒனம் நல்வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக