செவ்வாய், 30 ஜூன், 2015

எளிய தெய்வமே!



கன்னிமூல கணபதியே கரைபுரளும் பம்பையின்
  கரைமீது கனிந்து காட்சிதரும் மூலவனே
உன்னையே சேவித்து உள்ளமெலாம் கசிந்துருகி
  உந்தன் சோதரன் உயர்சபரி நாதனையே
நின்னருளால் காணுகின்ற நித்தம் கோடிபக்தர்கள்
  நீங்காது அரசமர நிழலில் குடியிருப்பாய்
என்னவரம் வேண்டுமென எமைகண்டே தந்தருள்வாய்
  எங்கும் காணுகின்ற எளிய தெய்வம் நீயன்றோ!
              ஆன்மிக மலர் அட்டைபட கவிதை கணபதி 30.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக