ஏணிப்படியாக என்றும் இருப்பவர் ..
..எண்ணும் எழுத்தும் என் விரல் வழி தந்தவர்,
எண்ணிலா நற்பண்பு என்னுள்ளே விதைத்தவர்
....என்றும் நான் உயர கண்டு களிப்பவர்
பண்ணும் என் செயலை பார்த்து வாழ்த்துபவர் .
....பாரினில் நான் வாழ புதுப் பாதை காட்டியவர்
கண் முன்னே நின்று கனிவோடு ரசிப்பவர் ...காலமெல்லாம் நாம் போற்றும் ஒருவர் ஆசிரியரே
சின்ன மனதில் இடம் பிடித்த வித்தகர்அவர் ..
...சிறிது மறக்க இயலாத சிந்தனை சிற்பி அவரே கணமேனும் நினைப்போம் காலமெலாம் போற்றி ..
....காலடியில் பணிவோம் கற்பித்த ஆசிரியர் தினம் இன்று
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .....ராதா கவி