மாருதியே
அறிவின் ஒளியாகி அன்பின்
வழியாகி
அருளின் உருவாகி ஆஞ்சநேயன் வடிவாகி
நெறியின் இடமாகி நெஞ்சே
கோவிலாகி
நாவின் வாக்காகி நாயகன் தோழனாகி
பொறியினை அடக்கி பொலியும்
தூதனாகி
பாரினில் துணையாகி பஜனையில் பூவாகி
தறிகெடும் மானுடத்தை தன்னுள்ளே
வைத்து
தரணியில் காத்திடும் தயாளனே மாருதியே!
ராதாகவி