வியாழன், 29 ஜனவரி, 2015

மாருதியே


      மாருதியே

அறிவின் ஒளியாகி அன்பின் வழியாகி
    அருளின் உருவாகி ஆஞ்சநேயன் வடிவாகி
நெறியின் இடமாகி நெஞ்சே கோவிலாகி
    நாவின் வாக்காகி நாயகன் தோழனாகி
பொறியினை அடக்கி பொலியும் தூதனாகி
    பாரினில் துணையாகி பஜனையில் பூவாகி
தறிகெடும் மானுடத்தை தன்னுள்ளே வைத்து
    தரணியில் காத்திடும் தயாளனே மாருதியே!


                                         ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக