பொங்கலோ
பொங்கல்
கங்கையும் காவிரியும் கண்ணெதிரே
இணையுமா
களங்களில் தீவிரவாத களபலிகள் ஒயுமா
எங்கும் ஈசலாய் எழுகின்ற
இலவசங்கள்
எம்முள் உழைக்கும் எண்ணத்தையே நீக்கிடுமா
ஒங்கும் அறிவியல் ஒளியுலகை
காட்டுமா
ஒப்பிலாகல்வியும் ஒதுக்காமல் கிடைக்குமா
மங்கலப் பெண்சிசு மானிலத்தில்
வளருமா
மண்ணின் மைந்தனென்ற மயக்கம் தீருமா
செங்கரும்பு புத்தரிசி
சோத்துப் பொங்கலிட்டு
செவ்வாயில் பொங்கலோ பொங்கலென பூரிக்கும்
உங்களுக்கு வாழ்த்து உவந்து
நான் கூற
உள்ளெழும் கனவுகள் உருவாகும் என்றே
தங்கிடும் நம்பிக்கை தருகின்ற
எதிர்பார்ப்பு
தண்ணீர் சூழ்ந்திட்ட தரணியில் நடக்குமா
எங்கும் உணர்வுகள் எழிலாக
செயலாகின்
எல்லோருக்கும் அன்றே எந்தன்
பொங்கல் வாழ்த்து
ராதா கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக