வியாழன், 8 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்



பொங்கலோ பொங்கல்

கங்கையும் காவிரியும் கண்ணெதிரே இணையுமா
       களங்களில் தீவிரவாத களபலிகள் ஒயுமா
எங்கும் ஈசலாய் எழுகின்ற இலவசங்கள்
       எம்முள் உழைக்கும் எண்ணத்தையே நீக்கிடுமா
ஒங்கும் அறிவியல் ஒளியுலகை காட்டுமா
       ஒப்பிலாகல்வியும் ஒதுக்காமல் கிடைக்குமா
மங்கலப் பெண்சிசு மானிலத்தில் வளருமா
       மண்ணின் மைந்தனென்ற மயக்கம் தீருமா

செங்கரும்பு புத்தரிசி சோத்துப் பொங்கலிட்டு
     செவ்வாயில் பொங்கலோ பொங்கலென பூரிக்கும்
உங்களுக்கு வாழ்த்து உவந்து நான் கூற
     உள்ளெழும் கனவுகள் உருவாகும் என்றே
தங்கிடும் நம்பிக்கை தருகின்ற எதிர்பார்ப்பு
     தண்ணீர் சூழ்ந்திட்ட தரணியில் நடக்குமா
எங்கும் உணர்வுகள் எழிலாக செயலாகின்
     எல்லோருக்கும் அன்றே எந்தன்
                            பொங்கல் வாழ்த்து
                              ராதா கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக