அமர்ந்தவர்
யாரோ?
கால் மடித்து குருந்த மரத்தடியினில்
கண்மூடி அமர்ந்திருந்த குருவான தட்ஷிணாமுர்த்தியா?
கால் தூக்கியாடிய கனகசபை
தவிர்த்து
கால்மேல் காலிட்டு களைப்பாறும் நடராஜனா?
காலாக்கினி தாங்கி காட்டினில்
திரிந்ததால்
கால் வலிக்க கைதாங்கும் காலபைரவனா?
நீலனாய் கங்கையை நீள்சடையில்
நிலவினை
நாகமதை கழுத்தினில் நல்லாரமாய் அணிந்தே
சூலமதைத் தாங்கியே சக்தியை
தன்னுடலில்
சேர்த்திட்ட சோதியா அர்த்தநாரீசுவரனா?
கோலவிழி முக்கண்ணனா? குந்திய
நமச்சிவாயமா?
கோயிலின் லிங்கமா? காத்தருள அமர்ந்தாயோ?
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக