இனிய நவராத்திரியே வருக!
கலையாக மலையாக அலையாக வருவாள்
கமலத்தின் உதித்தவன் கனிநாவில் இருப்பாள்
மலைவேந்தன் மேனியில் மறுபாதி ஆகிடுவாள்
மாதொரு பாகனாகி அவன் மேதினியில் சிறப்பான்
அலைகடைய அமிர்தமாகி அழகியதிருவாகி எழுவாள்
அனந்தன் மார்பினில் அமர்ந்திருந்து கனிவாள்
சிலையாகி கோவில்களில் சிங்காரமாய் பொலிவாள்
சிந்தனைக்கு எட்டாத செல்வியர் மூவரன்றோ!
அஷ்ட லக்ஷ்மியாய் அனைத்திலும் அவளாவாள்
ஆயகலை அறுபத்துநான்கும் அவளாகி ஒளிர்வாள்
துஷ்டரை வேரருக்க தூயசக்தி உருவாகிடுவாள்
துயர்நீக்க நவசக்தி துர்க்கையாகி தோன்றிடுவாள்
நிஷ்டையும் நியமமும் நெஞ்சினில் ஏற்றியே
நற்தூய மனதால் நாளும் துதித்திட
இஷ்டமாய் முத்தேவியர் இனிதே வந்திருந்து
இன்பமெலாம் பொழிகின்ற இனிய நவராத்திரியே வருகவே!
கலையாக மலையாக அலையாக வருவாள்
கமலத்தின் உதித்தவன் கனிநாவில் இருப்பாள்
மலைவேந்தன் மேனியில் மறுபாதி ஆகிடுவாள்
மாதொரு பாகனாகி அவன் மேதினியில் சிறப்பான்
அலைகடைய அமிர்தமாகி அழகியதிருவாகி எழுவாள்
அனந்தன் மார்பினில் அமர்ந்திருந்து கனிவாள்
சிலையாகி கோவில்களில் சிங்காரமாய் பொலிவாள்
சிந்தனைக்கு எட்டாத செல்வியர் மூவரன்றோ!
அஷ்ட லக்ஷ்மியாய் அனைத்திலும் அவளாவாள்
ஆயகலை அறுபத்துநான்கும் அவளாகி ஒளிர்வாள்
துஷ்டரை வேரருக்க தூயசக்தி உருவாகிடுவாள்
துயர்நீக்க நவசக்தி துர்க்கையாகி தோன்றிடுவாள்
நிஷ்டையும் நியமமும் நெஞ்சினில் ஏற்றியே
நற்தூய மனதால் நாளும் துதித்திட
இஷ்டமாய் முத்தேவியர் இனிதே வந்திருந்து
இன்பமெலாம் பொழிகின்ற இனிய நவராத்திரியே வருகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக