புலர்ந்திடும் கதிரே
எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே
எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக