வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புலர்ந்திடும் கதிரே

புலர்ந்திடும் கதிரே

எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
   வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
  கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
   மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
   புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
  புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
 கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
  தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக