வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விளங்கும் கரங்களும்
   பூசிய வயிறும் பழமோடு மோதகமும்
    மாசினை நீக்கிட முன்வரும் துதிக்கையும்
   நேசமிகு பார்வையும் நீங்காத கனிவும்
    வாசமிகு அருகும் வளமான எருக்கும்
        பூசிய திருநீரும் புவிமணக்கும் சந்தணமும்
    கேசமதில் விளங்கும் இளம்பிறை நிலவும்
    தூசாக என்துயர் தீர்த்திட வருமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக