ஞாயிறு, 6 நவம்பர், 2016

கந்தசஷ்டி முருகா



கந்தசஷ்டி  முருகா
கார்த்திகை பெண்கள் கைவளர்ந்த குமரா
பார்வதி கைசேர்த்த பாலகனே சரவணா
ஆறுமுகம் ஒன்றான ஆதிமூல கார்திகேயா
கூர்வேலால் சூரனை கொடியாக்கிய கந்தா
கார்கண்டு ஆடிடும் கானமயில் வேலா
சீர்வளர் தேவசேனா சேர்ந்தினைந்த சிவகுமரா
குறமகள் வள்ளியோடு கூடிமகிழும் குகனே
திருசெந்தூர் கடலாடும் செந்தில் ஆண்டவனே

ஆனந்தக் கூத்தாடி அழகான காவடியும்
தேனோடு தினைமாவு தித்திக்கும் கனிவகையுடன்
மான்விழி மாதரோடு மயிலமரும் ஷண்முகனே
உன்னையே நினைந்து உனைநாடும் பக்தர்தமை
கண்ணாலே கனிவாக காத்திடும்  முருகா
எண்ணத்தில் என்றும் எழுதிய காவியமே
வண்ணத்தில் என்னுள்ளே வாழ்கின்ற ஒவியமே
பண்ணுடன் பாடினேன் கந்தசஷ்டி நாளினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக