நந்தி வாகனனே
மதியாலே மாம்பழம்பெற
மாதாபிதா உலகுஎன
துதியோடு சுற்றிவந்து
தூயஞானப் பழம்பெற்ற
ஒதியுணரவே ஒம்காரமாய்
ஓளிமதிசிவன் உமைமடியில்
குதித்தெழுந்து குந்தியிருக்கும்
கூர்மதி கணநாதனோடு
கணங்களின் தலைவனாம
காளைநந்தி பெருமான்மீது
வணங்கும் ஆதிகுருவே
வளர்சக்தி தான்இணைய
கணமும் எமை பிரியாது
காத்திட அமர்ந்திருக்கும்
மணமிகு மங்கைபாகனே
மலையவனே வணங்குகின்றேன்
மதியாலே மாம்பழம்பெற
மாதாபிதா உலகுஎன
துதியோடு சுற்றிவந்து
தூயஞானப் பழம்பெற்ற
ஒதியுணரவே ஒம்காரமாய்
ஓளிமதிசிவன் உமைமடியில்
குதித்தெழுந்து குந்தியிருக்கும்
கூர்மதி கணநாதனோடு
கணங்களின் தலைவனாம
காளைநந்தி பெருமான்மீது
வணங்கும் ஆதிகுருவே
வளர்சக்தி தான்இணைய
கணமும் எமை பிரியாது
காத்திட அமர்ந்திருக்கும்
மணமிகு மங்கைபாகனே
மலையவனே வணங்குகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக