ஞாயிறு, 6 நவம்பர், 2016

முத்தாக வந்த முதல்மூவர்

முத்தாக வந்த முதல்மூவர்
சித்தார்த்தி ஆண்டு சிறப்பான  ஐப்பசிதிங்கள்
      சீர்மிகு காஞ்சியில் சிங்கார திருவெஃகா
 புத்தம்புதிய பொற்றாமரை பொய்கையில் அம்சமாகி
      புத்தோணமதில் பிறந்து அவதரித்த பொய்கையே
நித்தம் அலை புரளும் நீள்மல்லை திருக்கடலில்
      நீலோற்பவ மலரினில் நீள்கதாயுத அம்சமாகி
முத்தான அவிட்டமதில் மகிழ்ந்தெழுந்த பூதமே
      மறுநாள் சதயமதில் மயிலைநகர் கேணியில்
சித்தம் குளிர்விக்கும் செவ்வல்லி மலர்தனில்
      சீர்வாள் நந்தகத்தின் சீரான அம்சமாகி
குத்துவிளக்கென மலர்ந்த குளிர்வான பேயே
      கருவரை புகுந்து  ஜனிக்காத அயோநிஜர்களே
 
திருக்கோவலுர் தன்னில் திவ்யநாமம் பாடியே
     திருவருளால் ஒருங்கினைந்த திவ்யபிரபந்த முதல்வர்களே
ஒருவர்பின் ஒருவரை ஓர் அறையில் கூட்டியே
      ஒடிவந்து தன்னையிணைத்த ஒங்காரப் பெருமானை
கருவினில் அறிவுடையார் களிப்போடு பாடியே
     ககனத்தை   அன்பை கனிவோடு விளக்காக்கி
வார்கடலை  ஆர்வமதை வார்த்திடும் நெய்யாக்கி
      வருகின்ற கதிரவனை வளர்சிந்தையை   திரியாக்கி
சீர்மிகு பரந்தாமனுக்கு   சிந்தையுருக  சுடரேற்றி
       சீரான சுடரொளியில் சீராளனைக் கண்டுகொண்ட
பார்புகழ்  முதலாழ்வார்கள்    பிறந்திட்ட திங்களில்
      பிரபந்தமதில்  கலந்து  பிறவிக்கடல் நீந்துவோமே





     
\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக