சத்ய சாயி நூறாவது பிறந்தநாள்
இதயத்தில் தெய்வீகம் மலரும் நாளே இனிய பிறந்தநாள் என்ற சத்திய சாயி
சத்ய சாயி என வந்து சங்கடம் தீர்ப்பவரே சக்தி எல்லாம் ஆழ்ந்த நம்பிக்கைதானே உத்தம விதை விதைத்தால் என்றும் உயர் நல்லொழுக்கம் விளைச்சல் தரும் சித்தமதில் கடவுளை நினைத்து பஜனை செய்
சிறப்புகள் யாவும் உன் காலடியில் உணர்வாய்
நித்தம் நீ தந்த நல் அறிவுரைகள் வாழ்வில் நிகழ்வதே எம்மை என்றும் காக்கும்
2 அனைவருக்கும் எல்லையிலா அன்பை கொடு அனைவருக்கும் எதிர்பார்ப்பிலா சேவை செய் இணையில்லா தெய்வத்தை தேடு இதயத்தில் எழும் நம்பிக்கையே இறைவன் அன்னத்தை பசித்தவர்க்கு அளித்திடு
அவர் புசிப்பது கண்டு களித்திரு வீணடிக்காதே உணவை பணத்தை நேரத்தை ஆற்றலை விளையும் பண்பான கல்வியை விதைத்து விடு
உன்னுள்ளே உறை கின்ற தெய்வீக மதை உணர்வதே உண்மையான ஆன்மீகம்
ராதா கவி
சத்ய சாயி சரணம் சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக