அழகிய வெண்புறா கூட்டமே
அமைதியின் உருவமே நீர்தானோ !
சுழலும் உலகில் சூழ்ந்திருக்கும் பதட்டம்
சுழல் பீரங்கி வெடி சத்தம் !
மழலையும் மயங்கி பயந்திட
மானிடக் கூட்டம் அலைவது ஏன்?
குழலான சிறந்த மூக்குகளில்
கொஞ்சமும் சினம் வாரா தோ?
நிழலாக மரத்தடியில் கூடிக் கூடி
நீங்கள் மட்டும் மகிழ்வீரோ?
பழகும் இனிய தத்துவத்தை பாமரர்கள் யாம்
பயன் பெற தர மாட்டீரோ?
. ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக