புதன், 4 பிப்ரவரி, 2015

தைப்பூச நாயகனே!

ஊசலாடும் என்மனதை உள்ளே திருப்பி
   உந்தன் திருப்பாத உயர்வினைக் காட்டி
  வாசமுடன் வளமும் வகையான இன்பமும்
            வெறுப்பும் பகைமையும் விளைவித்த செயல்களும்
   நேசமுடன் நாடிநாளும் நலிந்துபோன எனக்கே
  நீங்காத இன்பத்தை நீயாக வந்தளித்து
பூசத்தின் நாயகனே புவியில் எந்தனையும்
                 புனிதமாக்கி வைப்பாயே (அறு) படைவீட்டு பெருமானே!

    ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக