ஆடிஅழைக்க!
ஆடிஅழைக்க ஆயிரநாமமோடு அசைந்தாடி வருவாயே
அம்மனென்று அலங்கரித்து அகங்குளிர மகிழ்ந்திடவே
தேடிவரும் செல்வமெலாம் தேவியுனை நினைத்தாலே
தெய்வத்திரு உருவே திகட்டாத பேரழகே
ஒடிவரும் நதியும் ஒங்கிஉயர்ந்த மலையும்
ஒய்யார சோலைகளும் ஒளிவீசும் தீபங்களும்
நாடிவரும் பக்தருக்கு நின்வடிவம் காட்டிடுமே
நாவினிக்க பாடுகிறோம் நல்வாழ்வு தந்தருள்க!
ஆன்மிக மலர் அட்டை பட கவிதை
16.7.16 ராதாகவி
ஆடிஅழைக்க ஆயிரநாமமோடு அசைந்தாடி வருவாயே
அம்மனென்று அலங்கரித்து அகங்குளிர மகிழ்ந்திடவே
தேடிவரும் செல்வமெலாம் தேவியுனை நினைத்தாலே
தெய்வத்திரு உருவே திகட்டாத பேரழகே
ஒடிவரும் நதியும் ஒங்கிஉயர்ந்த மலையும்
ஒய்யார சோலைகளும் ஒளிவீசும் தீபங்களும்
நாடிவரும் பக்தருக்கு நின்வடிவம் காட்டிடுமே
நாவினிக்க பாடுகிறோம் நல்வாழ்வு தந்தருள்க!
ஆன்மிக மலர் அட்டை பட கவிதை
16.7.16 ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக