ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஆதிகுருவே!

                                                   ஆதிகுருவே!

ஆதிகுருவே ஆலமரமடி அமர்ந்த அறிவே
   ஆலமுண்ட பரம்பொருளே அகிலத்தின் சுடரே
 போதிக்கவந்த பெருமானே பிறைசூடிய சடையோனே
    பாம்பும் நெருப்பும் பல்சுவடியும் சின்முத்திரையும்
 நீதியினைப் புகட்டிட நின்கரங்கள் தாங்கிட
    நான்கு சீடர்வழி நானிலம் வாழ்ந்திட
 ஆதிஅந்தம் இல்லாத அருமறை கடந்தவனே
    அருட்பார்வை அருள்வாயே தென்திசை தக்ஷிணாமூர்த்தியே!

ஆன்மிக மலர்
அட்டைபட கவிதை
23.7.16                                                  ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக