அறு வடிவான அழகான முருகா
பழத்தின் வடிவாகி பழனியில் நின்றாய்
பழமுதிர் சோலைதனில் பலமரவடிவாகி உயர்ந்தாய்
அழகிய சொல்வடிவாகி சுவாமிமலையில் பேசினாய்
அரியதிருப் பரங்குன்றமதில் அரும்துணை வடிவானாய்
முழங்கும்கடல் செந்தூரில் மூலஒளி வடிவாகினாய்
மகுடமென திருத்தணியில் மங்கல கலசநீர் வடிவானாய்
குழந்தையாய் குமரனாய் கோலவேல் வீரனாய்
கொடுமை தீர்க்கும் குகனே தெய்வ வடிவானாயே
பழத்தின் வடிவாகி பழனியில் நின்றாய்
பழமுதிர் சோலைதனில் பலமரவடிவாகி உயர்ந்தாய்
அழகிய சொல்வடிவாகி சுவாமிமலையில் பேசினாய்
அரியதிருப் பரங்குன்றமதில் அரும்துணை வடிவானாய்
முழங்கும்கடல் செந்தூரில் மூலஒளி வடிவாகினாய்
மகுடமென திருத்தணியில் மங்கல கலசநீர் வடிவானாய்
குழந்தையாய் குமரனாய் கோலவேல் வீரனாய்
கொடுமை தீர்க்கும் குகனே தெய்வ வடிவானாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக