வியாழன், 28 ஜூலை, 2016

அறு வடிவான அழகான முருகா

அறு வடிவான அழகான முருகா

        பழத்தின் வடிவாகி பழனியில் நின்றாய்
            பழமுதிர் சோலைதனில் பலமரவடிவாகி  உயர்ந்தாய்
        அழகிய சொல்வடிவாகி சுவாமிமலையில்  பேசினாய்
            அரியதிருப் பரங்குன்றமதில் அரும்துணை வடிவானாய்
        முழங்கும்கடல் செந்தூரில் மூலஒளி  வடிவாகினாய்
             மகுடமென திருத்தணியில் மங்கல கலசநீர் வடிவானாய்
        குழந்தையாய் குமரனாய் கோலவேல் வீரனாய்
             கொடுமை தீர்க்கும் குகனே தெய்வ வடிவானாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக