வியாழன், 28 ஜூலை, 2016

வடிவேல் முருகா

வடிவேல் முருகா
          
         வண்டுவிழி  அசைந்தாட   வாயிதழ் விரிந்தாட
             வலக்கரம்   ஓம்மென வடிவேல் இடக்கரமதில்நிற்க
         நீண்டுநிற்க  மார்போடு நீலமயில் உறவாட
             நெற்றிதனில் சந்தணமும் நீரும்குங்குமமும் நிமிர்ந்தாட
         கொண்டையாக குழலாட குதிக்கும் முத்தாட
             கொண்டடும் பக்தரை கூடிவந்து காத்திட
         தண்டை குலுங்கும் தாள்களில் பணிந்தேன்
             தங்கத் தேஏறி தனயனைக்  காக்கவருகவே
  
                                              ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக