சனி, 9 ஜூலை, 2016

ஆடலரசே! அழகே!

ஆடலரசே! அழகே!

அலைகடலாக இருபுறமும் அகன்ற சடையாட
    அரக்கன்மேல் அழகியவல அருட்பாதம் நின்றாட
 கலையாக இடபொற் கால்தூக்கி கொண்டாட
     கழுத்தினில் நாகம் கனிந்து நெளிந்தாட
  நிலையான நெருப்பும் நின்இடக்கரமதில் ஒளிவீசியாட
     நயமோடு வலக்கையில் நல்உடுக்கை ஒலியாட
  மலையாதேஎன வலக்கரமதில் வண்ணஅபயம் வரமாட
     மடங்கி நீண்டஇட மரகதக்கரம் வளைந்தாட

 முக்கண்ணன் முகமலரில் முன்முறுவல் பூத்தாட
    முடியினில் கங்கையோடு மூன்றாம்பிறை ஆடிவர
  தக்கதமியென தாளிமிட்டு துள்ளிபாத சரமாட
    தயைகாட்டும் இருவிழிகள் தண்ணிலவாய் குளிந்தாட
  திக்கும்எட்டு திசையும் திரண்டு பரந்தபூமி
    தன்னியக்கம் எந்நாளும் தடையின்றி ஆடிடவே
 எக்கணமும் ஆடுகின்ற எழிலரசே நடராசா
   எங்கும் நிறைந்தவனே எமக்கருளும் உன்னடியே!

ஆன்மிக மலர் அட்டை பட கவிதை
ஜூலை 9 2016
                                          ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக