ஆழ்வார் அமுதம்
பத்தவதாரம் எடுத்தாய்
பித்தனையும் கவர்ந்தாய்
முத்தமிழால் மலர்ந்தாய்
முத்துக்களான பாசுரமானாய்
சித்தம் தெளிய கீதையானாய்
பத்து தலையான் மேல் படுத்தாய்
எத்தனை நாள் நீ காத்திருப்பாய்
உத்தமனாய் நான் உன்னை சரணடைய!
ஞாயிறு, 23 ஜூன், 2019
ஆழ்வார் அமுதம்
அவரே
ஒளியும் அவரே
இருளும் அவரே
ஜடத்திற்கும்
...இருட்டுக்கும்..
அப்பாற்பட்டவரும். அவரே .தோன்றாதவர் அவரே .தோற்றமும் முடிவும்அற்றவர் அவரே
அறியப்படும் பொருளும் அவரே அறிவின் இலக்கும் அவரே .அனைத்து
இதயத்திலும் இருப்பவரும் அவரே!
கீதாசாரம்
யோகா தினம்
அமைதியான மனமே
மகிழ்ச்சி தரும்
அந்த மகிழ்ச்சி யின் வடிவம்யோகா
யோகா மதம் சார்ந்தது அல்ல
விஞ்ஞான அறிவு வழியே வருவது
வலிமையான உடலில் தான்
கட்டுப்பாடான மனம் இயங்கும்
உடல்.மனம்.சமூகம்.ஆன்மீகம்
எல்லாவற்றையும் மகிழச்செய்வது யோகா.
வாழ்க உலக யோகா தினம்
நானே
வெற்றி விரும்புவோரின்
உள் ஆக்க சக்தி நானே
அடக்குபவரின் உள் அடக்க சக்தியும் நானே
மறைக்கவேண்டியதை காக்க
மவுனமாக இருப்பவன் நானே
ஞானிகளின் உள் த த்துவ
ஞானமும் நானே
உயிர்கள் தோன்ற மூலமான
உயர் வித்தும் நானே
நானின்றி உலகில் ஏதுமில்லை
நன்கறிவாய் ஆன்மாவே!
கீதாசாரம்
குருநானக்
குருநானக்
என் உள்ளமே பண்பட்ட
நிலம் அதில்
நல் தியானம் எனும் விதை விதைப்பேன்
நற் செயலால் அதை காப்பேன்
நற் பயிராய் தெய்வீகம் விளையும் அதை
என் உடல் எனும் கடைமூலம்
விற்பேன்.என்மக்களுக்கு
அருளை வழங்குவேன்
எனக்கு பேரானந்தம் எனும்
லாபம் கிடைக்கும்
எனவே நான் ஒரு விவசாயி
ஒரு வியாபாரி........
புகழ் பழியை சமமாய் கருது
புகழ் பழியை சமமாய் கருது
பகைவனை நண்பனை சமமாக நடத்து. " நான் செய்கிறேன் " என எண்ணாதே நீயே
குணங்களை கடந்தவன்ஆவாய்
உலக வாழ்வில் ஈடுபாடு தவிர்
உயர் பக்தியிலே நிலை பெறு நீயே "சத்சித் ஆனந்தம் " எனும்
பரம்பொருளை அடையும்
பேறு பெறுவாய்!
கீதாசாரம்
இறைவன் வருவான்
இறைவன் வருவான்
மண்ணை விடு பெண்ணை விடு!
பொன் எனும் பொருளை விடு!
உன்னை நாடும் உறவை விடு!
உற்ற பந்த பாசத்தை விடு!
மண்ணில் பிறரை ஆளும்
உன் ஆளுமையை விடு!
பக்தியுடன் என் பாதங்களைப் பிடி
பக்கத்தில் வந்து என் கரம் நீட்டி
உன் விரல் பிடிப்பேன்!
உன்னத பேரின்பத்திற்கு உன்னை
என்னோடு அழைத்துச் செல்வேன்!