இறைவன் வருவான்
மண்ணை விடு பெண்ணை விடு!
பொன் எனும் பொருளை விடு!
உன்னை நாடும் உறவை விடு!
உற்ற பந்த பாசத்தை விடு!
மண்ணில் பிறரை ஆளும்
உன் ஆளுமையை விடு!
பக்தியுடன் என் பாதங்களைப் பிடி
பக்கத்தில் வந்து என் கரம் நீட்டி
உன் விரல் பிடிப்பேன்!
உன்னத பேரின்பத்திற்கு உன்னை
என்னோடு அழைத்துச் செல்வேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக