புதன், 10 ஜூலை, 2019

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

ஈர்இருபது ஆண்டுகள் ஆன்மீக
‌ஒளிவீசும் உருவம் உள்மறைய நீரினில் ‌ அனந்தசரசில் சயன
நித்திரை செய்த நீலமேகப் ‌பெருமானே!
வீரியமுடன்எழுந்துவெளிவந்து .‌‌‌எமக்கு
வரம்அருள வந்தாயோ? வடிவுடைய அத்தி வரதா
பிரம்மன் பூஜித்தபிரம்மாண்ட பரம்பொருளே!
பாமரன் எனக்காகவும் பாரினில் எழுந்தாயோ?
2.
பச்சையம் மணக்கும் மரகத மேனியனே!
பல்லாண்டு கிடந்தும் பரிமளிக்கும் சந்தணமே!
இச்சைகளை நீக்கிஇனிய தரிசனம் தர
இம்மை மறுமை பிணிதனை நீக்கிட
கச்சியில் கிடந்தும் நின்றும்
காட்சிதரும் காலத்தின் தலைவனே அத்திவரதரே!
மெச்சும் பணி ஏதும் மாநலத்தில் செய்தேனில்லை
மேகவர்ணனே நின் பாதமதில்
மனநிறைவோடு சரணடைந்தேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக