சஞ்சீவி மலைதாங்கி சகோதரன் உயிர்காத்தாய்
சீதையவள் தடுமாற சீவனைக் காத்திட்டாய்
வஞ்சனை அசுரரை வெந்தணலில் வேகவிட்டாய்
'வருகிறார்' எனக்கூறி விரதபரதனை தடுத்துகாத்தாய்
தஞ்சமென வந்தநல் வீபீஷணனை ஏற்கவைத்தாய்
தவமாக மங்கையரை தாயாக நினைத்திருந்தாய்
கொஞ்சமும் தயங்காது காகுத்தன் காலடியே
கோவிலென்ற சிரஞ்சீவியே கைதொழுதோம் மாருதியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக