பெரிய திருவடியென பக்தர் போற்றித்தொழ
பரந்தாமனும் தேவியும் பாங்குடன் அமர்ந்திருக்க
கரிய கஜேந்திரன் காலினை முதலை பற்ற
கதறி ஆதிமூலமேஎன கூவிய கணத்தில்
சரிந்த ஆடையும் தவிர்த்து சட்டென வந்துகாக்க
சீறிப்பறந்த உன்வேகம் சிந்தையில் நின்றிருக்க
கருட சேவையென கரியபெருமாள் உலாக்காண
கண்கள் பெற்றபேறு கவிதையும் கூறுமோ?
அன்மிக மலர் அட்டை பட கவிதை 9.6.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக