கரும்பும் இடக்கையில் கிளியும் வலக்கையில்
கமலத் தாமரையும் கனகமலரும் மறுகைகளில்
இருபாதம் மடித்து இருந்திடும் பத்மாசனம்
இரத்தின கீரிடம் திருமுடியில் ஒளிவீசும்
கருவிழி இரண்டும் கருணை மழை பொழியும்
கழுத்தினில் அணிகலன் கதிர்வீசி அசைந்தாடும்
மருவிலா தேவியவள் மாதங்கி புவனேஸ்வரி
மங்களம் தந்திடுவாள் மலைமகள் காமாட்சியே!
ஆன்மீகமலர் அட்டைப்படக் கவிதை 23-6-2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக