அமைதியான மனமே
மகிழ்ச்சி தரும்
அந்த மகிழ்ச்சி யின் வடிவம்யோகா
யோகா மதம் சார்ந்தது அல்ல
விஞ்ஞான அறிவு வழியே வருவது
வலிமையான உடலில் தான்
கட்டுப்பாடான மனம் இயங்கும்
உடல்.மனம்.சமூகம்.ஆன்மீகம்
எல்லாவற்றையும் மகிழச்செய்வது யோகா.
வாழ்க உலக யோகா தினம்
ஞாயிறு, 23 ஜூன், 2019
யோகா தினம்
நானே
வெற்றி விரும்புவோரின்
உள் ஆக்க சக்தி நானே
அடக்குபவரின் உள் அடக்க சக்தியும் நானே
மறைக்கவேண்டியதை காக்க
மவுனமாக இருப்பவன் நானே
ஞானிகளின் உள் த த்துவ
ஞானமும் நானே
உயிர்கள் தோன்ற மூலமான
உயர் வித்தும் நானே
நானின்றி உலகில் ஏதுமில்லை
நன்கறிவாய் ஆன்மாவே!
கீதாசாரம்
குருநானக்
குருநானக்
என் உள்ளமே பண்பட்ட
நிலம் அதில்
நல் தியானம் எனும் விதை விதைப்பேன்
நற் செயலால் அதை காப்பேன்
நற் பயிராய் தெய்வீகம் விளையும் அதை
என் உடல் எனும் கடைமூலம்
விற்பேன்.என்மக்களுக்கு
அருளை வழங்குவேன்
எனக்கு பேரானந்தம் எனும்
லாபம் கிடைக்கும்
எனவே நான் ஒரு விவசாயி
ஒரு வியாபாரி........
புகழ் பழியை சமமாய் கருது
புகழ் பழியை சமமாய் கருது
பகைவனை நண்பனை சமமாக நடத்து. " நான் செய்கிறேன் " என எண்ணாதே நீயே
குணங்களை கடந்தவன்ஆவாய்
உலக வாழ்வில் ஈடுபாடு தவிர்
உயர் பக்தியிலே நிலை பெறு நீயே "சத்சித் ஆனந்தம் " எனும்
பரம்பொருளை அடையும்
பேறு பெறுவாய்!
கீதாசாரம்
இறைவன் வருவான்
இறைவன் வருவான்
மண்ணை விடு பெண்ணை விடு!
பொன் எனும் பொருளை விடு!
உன்னை நாடும் உறவை விடு!
உற்ற பந்த பாசத்தை விடு!
மண்ணில் பிறரை ஆளும்
உன் ஆளுமையை விடு!
பக்தியுடன் என் பாதங்களைப் பிடி
பக்கத்தில் வந்து என் கரம் நீட்டி
உன் விரல் பிடிப்பேன்!
உன்னத பேரின்பத்திற்கு உன்னை
என்னோடு அழைத்துச் செல்வேன்!
வியாழன், 30 மே, 2019
அரியணை ஏறும் அஞ்சாத சிங்கம்
1. பிரதமராக அரியணை ஏறும்
பார் புகழும் அஞ்சாத சிங்கம்
பாரதம் புகழ் இனி ஒங்கும்
பாரில் நாடுகள் வாழ்த்தும்
சீரான அரசு செழிக்கும்
சீர்வளம் யாவும் பெருகும்
கூரான அறிவும் பொறுமையும்
கொண்ட மோடிஜியின் பதவிஏற்பு
2. உலகின் திருவிழா இன்று
உன்னம் பொங்கும் மகிழ்வால்
பல்வேறு திட்டங்கள் இனி
பாய்ந்துவரும் காட்டாறுபோல்
கலகலத்து ஒடிவரும் கங்கையும்
காவிரியும் இணையும் விரைவில்
சலசலக்கும் கிருஷ்ணா கோதவரி என
சகல நதிகளும் இணையும்
3. தாய்மை சிறக்க தக்கபல
திட்டங்கள் கேஸ் மானியம்
சேய் தாய் பாதுகாப்பு மருத்துவம்
சேர்த்து வரும் இன்ஷுரன்ஸ்
நோய்நொடி ஒடிவிடும்
நாடிப்பெருகும் மருத்துவர்களால்
பாய்ந்து வரும் நீரால்
பலப்படும் விவசாயம்
4. உழவருக்கு கைகொடுக்க வரும்
உண்மையான கடன்வசதி
தழைக்கும் விதை உரம் மானியம்
தன்வீடு தேடிவரும் இனி
பழங்குடியினருக்கு பல்வேலை வாய்ப்பு
பள்ளிக்கள் பெருக்கம் கல்விதரம்
செழிக்கும் கல்வித்துறை இனி
செவ்விய திட்டங்களின் வழி
5. வீடு இல்லாதோர் இல்லை இனி
விளங்கும் வீடுடல்லாம் ஒளிவீசும்
நாடுஎல்லாம் பாதைகள் வளரும்
நல்லொளி தரும் மின்விளக்குடன்
ஒடி ஒளியும் போராட்டங்கள்
ஒளிதரும் தொழில்வளம்
தேடித்தேடி தொழிற்சாலை
தோன்றும் கிராமம் தோறும்
6. கலாச்சாரம் பண்பாடு பாதுகாப்பு
கலைகள் எங்கும் பொலியும்
சிலை கொண்ட கோவில்கள்
சீரோடு பாதுகாக்கப்படும்
துவங்கும் இந்தியப் பண்பாடு
துதித்து அனைவரும் ஒன்றாகிடுவர்
கலவரம் என எதும் இல்லை இனி
களங்கமிலா மதங்கள் இணைந்து வாழும்
7. இமயமுதல் குமரிவரையில்
இந்தியன் என்ற ஒரே உணர்வு
எமது நாடு எனும் பற்றுடன்
எழுந்திடும் ஒற்றுமை உணர்வு
தமது என எதையும் எண்ணாமல்
நமது என பகிர்ந்து மகிழும்
மதம் மொழி இனம் பிரிவுகள்
விலகி ஒடும் வெற்றுமையில்
ஒற்றுமை காணும்
8. மலர்ந்த தாமரை நாடெங்கும்
மணம் வீசி மகிழ்விக்கும்
எல்லா நேரமும் நாட்டையே
எண்ணி நிற்கும் தலைவன்
வல்லவன் மோடிஜி தலைமையில்
வளர்க்கும் பாரத நாட்டை
வல்லாசாக்கும் வான்தொடும் புகழ்பெரும்
வாழ்த்துவோம் வாழ்க மோடி அரசு என
வாழ்க வந்தேமாதரம்
திங்கள், 30 ஏப்ரல், 2018
மே தினம்
1. கல்லிலும் முள்ளிலும் கதிர்புகா கானிலும்
கடுகிஏறும் மலையிலும் கடினப் பாறையிலும்
அல்லும் பகலும் அலை ஒயா கடலடியினிலும்
அசையும் காற்றைக் கடந்து அண்ட வெளியிலும்
வெல்லும் கைகள் வழிப்போடு பணிசெய்யும்
வாட்டும் குளிரிலும் வரைமுகட்டில் காத்திருக்கும்
வில்லாக வளைந்தும் வேர்வை சிந்தியும்
விவாதம் பேதம் மதம் வேலிகள் கடந்தும்.
2. கைகளில் எடுத்து கனமிகு ஆயுதங்களில்
கருவாகிப் பிறந்திடும் கனரக பொருட்கள்
கைகளில் அடங்கும் குண்டூசி முதல்
கடல் கடந்து தாக்கும் கைவண்ண ஊர்திகள்
கைகளில் மாலை கட்டி கடவுளை ஏற்றிடும்
காலைமுதல் மாலைவரை கணநேர ஒய்வின்றி
கைகளை உயர்த்திடும் கனவின் நாயகர்களே
கைகூப்பும் வாழ்த்துக்கள் கவின்மிகு மேதினத்தில்
ராதாகவி
கோவை