கொஞ்சும் செவ்வாயில் குவளை விரல்வைத்து
குட்டிவேல் மறுகையில் கெட்டியாகப் பிடித்து
விஞ்சும் வண்டுவிழி வட்ட முகமதில் சுழல
விளங்கும் செவிதனில் வெண்முத்து விளையாட
தஞ்சமென தோள்களில் தளிர்மாலை தழைந்தாட
தகைவான கருங்கூந்தல் தலையின் மேல்ஒளி
மிஞ்சும் நவரத்தினம் மின்னும் கிரீடம்தங்க
மிளிரும் திருநீறும் சந்தணகுங்குமம் பளீரிட
பிஞ்சுமுகம் காட்டிஎமை பித்தனாக்கும் சிவபாலா
பழனியும் செந்தூரும் பழமுதிர் சோலையும்
மஞ்சுசூழ் திருத்தணியும் மரகதப் பரங்குன்றமும்
மகிமைமிகு ஸ்வாமி மலையும் இருந்து
அஞ்சேல்என அபயகரம் அன்போடு அருள்பவனே
அறியாப் பிள்ளைபோல் புன்னகை பூத்தாயே
தஞ்சமென வந்தோம் தாங்கியே காத்திடுவாய்
தயக்கமும் உண்டோ தவமான பாலகுமாரா!
ஆன்மிக மலர் அட்டைபடம் கவிதை 5.5.2015
பாலமுருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக