புதன், 13 மே, 2015

தவமே தவம் செய்தால்

   
பாதம் இரண்டு மடக்கி பத்மாசனம் இட்டு
     பாசுபதாஸ்தரம் தரவல்ல பரமேஸ்வரன் இருகைமடக்கி
மோதும் உடுக்கை மாய்க்கும் சூலம் மறுகைகள் ஏந்த
     மாபெரும் கழுத்தினை சுற்றி முத்துநாகம் விளையாட
சேதம் தவிர்த்த சிறுபிறையை சடையினில் தாங்கி
     சிவந்த முக்கண்மூட சிலிர்க்கும் வெண்ணிறு ஒளிர
வேதநாயகனே வெண்பனீ மலைமுகட்டில்
      தவமேதவம் செய்யும் தவக்கோலம் யாருக்காக?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக