செவ்வாய், 19 மே, 2015

எழிலரசி திருமகளே!



பொன்தகழி பின்சுழல பொற்கரம் பொன்தூவ
  பச்சை பட்டாடைதனில் பவித்திரமாய் இருப்பவளே
பொன்கலசம் இடக்கையில் பொற்றாமரை மறுகைகளில்
  பொன்இதழ் சிவந்த பூந்தாமரையில் அமர்ந்தவளே
புன்னகையே உன்எழிலோ பொலியும் ஆபரணமோ
  புதுத்தளிராய் மிளிர்பவளே புதுமலராய் மலர்பவளே
என்றும் கடைக்கண்ணால் எல்லாச் செல்வமும்
  எமக்கருள வந்திடுவாள் எழிலரசி திருமகளே

அன்மிக மலர் 19.5.2015 அட்டை படம் லட்சமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக