திங்கள், 11 மே, 2015

கணத்தில் வந்த தசாவதாரம்



கணத்தில் உலகுகாக்க கருமீனாகிவந்த மச்சமா?
  கீறியே பூமியை கவின்வேதம் மீட்ட கூர்மமா?
கணத்தில் கொம்பால் குடைந்து தேவியை
  கடல்மேல் தந்திட்ட கருணை வராகமா?
கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்த
  கர்ஜிக்கும் சிங்கமுக நரஹரி நரசிம்மனா?
கணத்தில் உயர்ந்து காலடியால் ககனமதை
  கண்முன் அளந்த திரிவிக்ரம வாமனனா?
கணத்தில் மன்னர் கருந்தலை கொய்து
  ககனத்தில் வென்ற கர்மவீர பரசுராமரா?
கணத்தில் ஏழுமரம் கணையால் துளைத்திட்ட
  காருண்ய மூர்த்தி காகுத்த ராமனா?
கணத்தில் மல்லரை கைகளால் வெல்லும்
  கண்ணன் சோதரன் கோபமிகு பலராமனா?
கணத்தில் களத்தில் கீதை உபதேசித்த
  கார்மேகக் கண்ணனா? கார்கடல் துயில்நீத்து
கணத்தில் துயர்நீக்க கலியுகம் வரவிருக்கும்
  கல்கியா? தசாவதார கற்பக நாராயணா?
கணத்திலும் உனைமறவாத வரம் தந்தருள்
  காலமெலாம் உன்னை கருத்தினில் இருத்திடவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக