சூரனை அழித்து சேவல் மயிலாக்கிய
சுந்தரன் கந்தன் சரவனத்தில் வந்தநாள்
மாரனை எரித்த மகாதேவன் நெற்றியில்
மூடிய கண்திறந்து முத்தாக வந்தஒளி
தாரகையாய் தாமரையில் தஞ்சம் புகுந்திட
தாயாக கார்த்திகை கன்னியர் தாங்கிஎடுத்த
பேரன்பில் வளர்ந்து பார்வதி சேர்த்தணைக்க
பன்னிரு கையோடும் பால்முகம் ஆறோடும்
பரம்பொருளாய் வந்தவனே படைவீடு கொண்டவனே
பெருமைமிகு வைகாசி விசாகப் பேரருளே பணிந்தேனே
அன்மிக மலர் 26.5.2015 அட்டை படம் ஆறுமுகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக