வைகாசி விசாகம் வண்ணமயிலில் பிரவேசம்
வீரவேல் ஒளிவீசும் வரம்தரும் அபயகரம்
வைகையென கைவைத்து வைகை தனைஅளித்தாள்
வாரியனைத்திட சரவண ஆறுமுகம் வந்தான்
வாகைசூட வைரவேல் வெற்றிஆசி உடன்அளித்தாள்
வீரனை சூரனை வதைத்து சேவல்மயிலாக்கினான்
தோகை மயில்மீது தேவியருடன் வருவாயே
தொண்டருக்கு அருள்செய்து தேனாக இனிப்பாயே!
அன்மிக மலர் 26.5.2015 அட்டை படம் ஆறுமுகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக