செவ்வாய், 26 மே, 2015

வைகாசி விசாகம்



வைகாசி விசாகம் வண்ணமயிலில் பிரவேசம்
  வீரவேல் ஒளிவீசும் வரம்தரும் அபயகரம்
வைகையென கைவைத்து வைகை தனைஅளித்தாள்
  வாரியனைத்திட சரவண ஆறுமுகம் வந்தான்
வாகைசூட வைரவேல் வெற்றிஆசி உடன்அளித்தாள்
  வீரனை சூரனை வதைத்து சேவல்மயிலாக்கினான்
தோகை மயில்மீது தேவியருடன் வருவாயே
  தொண்டருக்கு அருள்செய்து தேனாக இனிப்பாயே!

அன்மிக மலர் 26.5.2015 அட்டை படம் ஆறுமுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக