ஒருசில சொற்கள்...
கடந்த 6.4.2015 முதல் 5.5.2015 வரைஎழுதி
நிறைவு செய்யப்பட்ட 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' என்ற
கவிதை தொகுப்பினை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விழைகிறேன்
இந்த காலக்கட்டத்தின் நிகழ்வுகள், செயல்கள்,
நினைவுகள், சந்திப்புகள் என பல்வேறு முனை தாக்கங்கள்
இக்கவிதைகளில் உணரமுடியும்
ஸ்ரீ ஐயப்பன் எனது இஷ்டதெய்வம். அவரிடம் நான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை இந்த கவிதை காலக்கட்டம் மேலும் உறுதி படுத்தியுள்ளது
எனது கோரிக்கைகளையெல்லாம் கூடஇருந்து நிறைவேற்றும் ஐயப்பன் மீது நூறு கவிதைஎழுத எண்ணினேன். ஐயப்பன் அதையும் நிறைவு செய்துவிட்டார்
எல்லாம் 'அவன் நடத்துவது' என்ற நம்பிக்கை பரிபூரண மன அமைதியை தந்துள்ளது
இனி 'ஸ்ரீ ஐயப்பன் நூறு' கவிதைகள் உங்கள் பார்வைக்கு - படிக்க - ரசிக்க - உணர - ஐயப்பன் அருளுக்கு பாத்திரமாக!
கோவை ராதாகவி
5.5.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக