ஞாயிறு, 10 மே, 2015

அன்னையர் தினம்


அடிப்பாள் திட்டுவாள் ஆரவாரத்துடன் கோபிப்பாள்
     ஆத்திரத்தில் சபிப்பாள் அடுத்தகணம் அழுவாள்
துடிப்பாள் நீவிழுந்தால் தூக்கிமண் துடைப்பாள்
      துளிநீர் உன்கண்ணில்வர தன்ரத்தமென பதறுவாள்
அடிப்பாய் அவமதிப்பாய் அவதூறு பேசுவாய்
      அனைத்தையும் பறித்து அனாதையாய் விடுவாய்
அடிமனதில் பாபத்தை அடுத்த தலைமுறைக்கு
       அழைத்து செல்கிறாயேயென அகத்தில் ஆதங்கமடைவாள்
படிப்படியாய்  ஏறியெங்கும் பகவானை வேண்டுவாள்
        பாசத்தால் நாம்செய்த பாபத்தையும் தான் ஏற்க
விடியவிடிய வேண்டுவாள் வேதனையை மறைத்தே
        விடியலாக நம்வாழ்வே வாழ்வாக கொண்டிடுவாள்
நொடியில் உணருவீர் நேரில் காணும் தெய்வம்
        நம்மை பெற்றதாய் நலம்விரும்பும் அன்னையே
நாடியே நினைப்பிர் நம் அன்னையர் தினமதில்
       நாட்டில் பெண்கள் எல்லாம் நம்மைகாக்கும் அன்னையரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக