செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நாகலிங்கம்



நாகலிங்கம்
  

             கண்ணுதல் கடவுள் கங்கைதனை சூடியவன்
                கழுத்து சிரசு கைகளில் ஆபரணமாய்
            எண்ணற்ற நாகங்கள் எளிதாக அணிபவன்
                எடுத்தியம்ப இயலாத எதிர்வரும் துன்பங்கள்
            கண்காது மூக்குவாய் மெய்யெனும்  ஐம்புலங்கள்
               கணக்கிலா தீச்செயலில் கலக்கமின்றி   ஈடுபடின்
             மண்மேல் விஷத்தை கக்கிடும் நாகமாகும்
                 மனதால் ஐம்புலனை மகிமையுடன் அடக்க
             கண்கவரும் ஆபரணமாய் கருநாகம் மாறிடும்
                 காணும் நாகாபரணம் அணிந்திட்ட சிவதரிசனம்
             எண்ணிலா மனத்துயர் ஏற்றமிலா தீய ஆசை
                 எல்லாம் நீங்கியே இன்பவாழ்வு தந்திடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக