ஸ்ரீ
பஞ்சாயுத பாணி
சுதர்சனம்
எனும் சக்கரம் சுழன்றிட
சங்கம் எனும்பாஞ்ச சன்யம் ஒலிஎழுப்ப
கதை என்னும் கெளமோதகி கையினில்எழ
கட்கம் எனும் நந்தகம் ஒளிவீச
மோதிடும் மேகமதின் மழையென சரம்பொழியும்
மேன்மைமிகு சார்ங்கம் எனும்
மேலான வில்நாண்ஏற
ஆதிசேடன் குடையாகிவர அழகிய பஞ்சாயுதம்
தாங்கி
அடியவரை காக்கவரும் அருள்மிகு பெருமானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக