தென்மதுரைத்
தேவனே!
மதுரையம்பதி மாநகர் மீனாட்சியை மணமுடித்த
மகேஸ்வரா சுந்தரேசா மகுடத்தில் கங்கைதாங்கி
மதுமதியை பிறையாக்கி மணிச்சடையில் சூடியவனே
மங்கை அங்கயற்கண்ணி மலர்கரம் பிடித்தவனே
மதுரத்தமிழ் மங்கல தென்மதுரை மருமகனே
மாமதுரை தமிழ்சங்கத்தின் முதல்வனான தலைவனே
மதுரமொழி உமையவள் மனமகிழும் மாதேஸ்வரா
மங்கையவள் துணையோடு மங்கலங்கள் தந்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக